தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக் கோவிலியில் 4 கோடி மதிப்பில் தங்க கொடிமரத்துக்கு திருப்பணி, சிறப்பு பூஜை நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில் ரூ.9 கோடி மதிப்பில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிக்கு பூமி பூஜை, நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தன் பணிகளைத் தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இந்து சமய அறநிலையத்துறை குழு தலைவர் மோகன், கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் ராஜாராம் தாசில்தார் மணிகண்டன்,இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சிவகலை பிரியா,மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளரிடம் கூறுகையில் :
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் ஏற்கெனவே 11 மண்டல இணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. மேலும் கூடுதலாக 9 மண்டல இணை ஆணையர் அலுவலகம் அமைக்க 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலியிலிருந்து பிரித்து தூத்துக்குடி மற்றும் தென்காசியை இணைத்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு மண்டல இணை ஆணையர் அலுவலகம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி சோர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் பீடம் 12 அடி முருகன் சிலை 123 அடி என மொத்தம் 135 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது.
ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூரில் யாத்திரிகர்கள் தங்குவதற்கான அறைகள் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் பிரசாதம் தபால் மூலம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். படிப்படியாக அனைத்து கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 12 ஆயிரம் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய கோயில் குடமுழுக்கு தமிழகம் முழுவதும் முறையாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் வெளிப்புற பிரகாரம் கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார் அவர். பேட்டியின் போது செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.